52-வது தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்!
Newstm Tamil April 17, 2025 10:48 PM

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அடுத்த மாதம் 14-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைத் தொடர்ந்து மே மாதம் 14-ம் தேதி, நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.